செவ்வாய், 1 டிசம்பர், 2015
பகுதி நேரசிறப்பாசிரியர்கள்
வியாழன், 15 அக்டோபர், 2015
சனி, 10 அக்டோபர், 2015
வியாழன், 8 அக்டோபர், 2015
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
நேற்றைய கோரிக்கை நாளேடுகளில்
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
கோரிக்கை பேரணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்
http://veerapandisimbu.blogspot.in/2015/09/blog-post.html?m=1
சனி, 13 ஜூன், 2015
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்க 5வது மாநில செயற்குழு கூட்டம்
http://veerapandisimbu.blogspot.in/2015/06/5.html?m=1
சனி, 26 செப்டம்பர், 2015
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
.........................................................................
தமிழில் டீக்கு “தேநீர்’,
காபிக்கு “குளம்பி’ என்று
பெரும்பாலோருக்குத்
தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்
அறிவோம்!
சப்பாத்தி – கோந்தடை
புரோட்டா – புரியடை
நூடுல்ஸ் – குழைமா
கிச்சடி – காய்சோறு, காய்மா
கேக் – கட்டிகை, கடினி
சமோசா – கறிப்பொதி, முறுகி
பாயசம் – பாற்கன்னல்
சாம்பார் – பருப்பு குழம்பு,
மென்குழம்பு
பஜ்ஜி – தோய்ச்சி, மாவேச்சி
பொறை – வறக்கை
கேசரி – செழும்பம், பழும்பம்
குருமா – கூட்டாளம்
ஐஸ்கிரீம் – பனிக்குழைவு
சோடா – காலகம்
ஜாங்கிரி – முறுக்கினி
ரோஸ்மில்க் – முளரிப்பால்
சட்னி – அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் – குளிர் குடிப்பு
பிஸ்கட் – ஈரட்டி, மாச்சில்
போண்டா – உழுந்தை
ஸர்பத் – நறுமட்டு
சோமாஸ் – பிறைமடி
பப்ஸ் – புடைச்சி
பன் – மெதுவன்
ரோஸ்டு – முறுவல்
லட்டு – கோளினி
புரூட் சாலட் – பழக்கூட்டு
புதன், 2 செப்டம்பர், 2015
எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ஆயுத சக்திகள்
இது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல். சாதாரண நீர்மூழ்கி கப்பல்கள், பாட்டரியை சார்ஜ் செய்யவும், எரிபொருள் நிரப்பவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாய் துறைமுகத்துக்கு வர வேண்டியிருக்கும். ஆனால், இந்த நீர்மூழ்கி கப்பல் அணுசக்தியில் இயங்குவதால், ஒரு மாதம் வரை கூட கடலுக்கடியில் இருக்கும். மேலும், எதிரி நாடுகளால் கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியாது. இந்த நீர்மூழ்கி கப்பலில் 12 ஏவுகணைகளையும், அதில் அணுகுண்டுகளையும் பொருத்தி, இலக்குகளை குறி தவறாமல் தாக்குதல் நடத்த முடியும். இந்த மாபெரும் நீர்மூழ்கி போர்க்கப்பலில் 80 பேர் வரை செல்ல முடியும். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த வகை நீர்மூழ்கி கப்பல் உள்ளது.
வான்வழி, நீர்வழி மற்றும் கடல்வழியாக ஊடுருவல் முயற்சிகளை முன்கூட்டியே கண்டறியும் வசதியுடைய ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் நடமாடும் கண்காணிப்பு விமானங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உருவான அதிநவீன இந்த கண்காணிப்பு ரேடார் சாதனம், ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட ஐஎல்-76 விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போர் நடைபெறும் பகுதிகளில் எதிரிகளின் அசைவுகளை துல்லியமாக கண்டறிந்து, எதிரி விமானங்கள், துருப்புகளை இடைமறிப்பதற்கு இந்த விமானத்தின் தகவல்கள் பயன்படும். மேலும், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முற்படும் விமானங்களையும் கண்டறிந்து, ராணுவ கட்டுப்பாட்டு மையத்தற்கு தகவல்களை அனுப்பும். பிற நவீன கண்காணிப்பு சாதனங்களைவிட 10 மடங்கு அதிவேகமானது. மூன்று விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
பாம்பு கடித்து இறந்துவிட்டல் உயிர் பிழைக்கும் மூலிகை
சித்த வைத்தியத்தால் முடியும்! பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி
விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை. பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால்
உடலில் உயிர் மட்டும் இருக்கும் கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா
என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற
வேண்டும் எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து
விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும். மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்.
நன்றி
http://www.pannaiyar.com/category/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
ஈமக்காடுகள்
சங்க கால ஈமக்காடுகள் குறித்த ஒலிச்சித்திரம் ஒன்றைத் தயாரித்து வரும் மதுரை அகில இந்திய வானொலி நிலையம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்பதுக்கைகள் (ஈமக்கல்லறை) குறித்த ஆய்வில் இறங்கியது. இம்முயற்சிக்கு உறுதுணையாக, தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணியின் திட்டத்தலைவர் பாரதி, வரலாற்றுப் பேராசிரியர் வெங்கட்ராமன், தொல்லியல் அறிஞர்வேதாசலம், சித்தர்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கௌதம சித்தார்த், தொல்லியல் ஆர்வலர் இரா.சிவக்குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மதுரைக்கு அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டஈமக்கல்லறைகள் இந்த ஆய்வுக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இக்கல்லறைகள் அனைத்தும் நமது முன்னோர்களின் “நீத்தார் வழிபாட்டு” முறையை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. சங்ககாலத்
திற்கு முற்பட்ட இனக்குழுக் காலத்தில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையை இக்கல்லறைகள் வெளிக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் காணப்படும் கல்பதுக்கைகள் மற்றும் கல்திட்டைகளின் வடிவம் இங்கு நிறைந்துள்ளன. மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகியும், கல்பதுக்கைகள் தொடர்பான ஆய்வாளருமான இராஜராமன், “சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள நெடுநிலை நடுகல், குத்துக்கல் நடுகல், கற்குவை போன்ற சில வடிவங்களும் இவ்விடத்தில் நிறைந்து காணப்படுகின்றன ’’ என்கிறார்.
தேனி மாவட்டம் வருச நாட்டிற்கு அருகிலுள்ள வேம்பூலி, கொடைக்கானல் மலைப் பகுதியிலுள்ள தாண்டிக்குடி, ஆடலூர், பண்ணைக்காடு ஆகியபகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புதிய செய்திகளை இக்குழு வெளிக் கொணர்ந்துள்ளது. அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மதுரைக்கு அருகில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலையின் அடிவாரத்தில் அடர்ந்த முட்புதர்களைக் கொண்டுள்ள இந்தஈமக்காட்டில் எங்கு திரும்பினாலும் கற்களாகவும் கற்குவியலாகவுமே தென்படுகின்றன.
மரம், மலை, ஆறுகளை வழிபடுவதற்கு முன்பாக பண்டைய மாந்தர்கள் இறந்துவிட்ட தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். உடல்களை எரித்த பின்பு மீதமிருக்கும் எலும்புகளையும், இறந்தோர் பயன்படுத்திய பொருட்களையும் ஓரிடத்தில் அவர்களின் நினைவாகப் புதைத்தனர். அவ்விடத்தை அடையாளம் கொள்வதற்காக செதுக்கிய பாறைகளைக் கொண்டு கல்லறைகளை ஏற்படுத்தினர். அவையே கல்திட்டைகள், கல்பதுக்கைகள் என்று அழைக்கப்பட்டன. இறந்து போன நமது முன்னோர்களை வணங்குகின்ற மரபு இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்து போன முன்னோர்களை நினைத்து ஆறுகளில் குளித்து வருவது இந்த நம்பிக்கையின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். ‘‘கோவில்களை அமைப்பது மற்றும் வழிபடுவதற்கான ஆகமமுறைகள் அனைத்தும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். தற்போதைய கடவுள் வழிபாட்டிற்கான அத்தனை கூறுகளும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையில் புதைந்திருக்கிறது.” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர்இரா.வெங்கட்ராமன்.
இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மா இருப்பவர்களை வழி நடத்துகிறது என்ற நம்பிக்கையின் தொடர்ச்சி தான் மூத்தோர் வழிபாடு. நுண் கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்து விட்டுக் கற்களைக் கொண்டு சிறிய மேடு ஒன்றை உருவாக்கினர். இது கற்குவை என்றழைக்கப்பட்டது. பெருங்கற்காலத்தில் மலைப்பகுதியில்வாழ்ந்த மக்கள் பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கல்திட்டைகளை அமைத்தனர். சமவெளியில் வாழ்ந்த மக்கள் தரைக்குக் கீழேகுழி தோண்டி அதற்குள் கற்பலகைகளை இடது, வலது பக்கங்களில் செருகி தரையிலும் பதித்தனர். பிறகு மேலே தொப்பிக்கல் அல்லது மூடுகல் என்றழைக்கப்படுகின்ற கல்லைக் கொண்டு அவ்வறையை மூடினர்.
இக்கல்லறைக்கு அருகிலேயே சிறியதாக ஓர் அறையை அமைத்து அதற்குள் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களைப் புதைத்தனர். இறந்தவர்களிடம் தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் கேட்கும் வகையில் அறையின் கிழக்குப் புறமாக “பானை ஓட்டை” ஒன்றினையும் அமைத்தனர்.
ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன்,கொரியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலிமற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில்எல்லாம் ஆங்காங்கே பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன இவற்றின் காலம்கி.மு.4 ஆயிரத்திலிருந்து கி.மு.3 ஆயிரம் வரைஎனத் தொல்லியலாளர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தை பெருங்கற்காலப் பண்பாடு என்று தமிழிலும் “மெகாலித்திக்பீரியட்” என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர். ஏறக்குறைய இதே காலக்கட்டங்களில்உருவாக்கப்பட்ட கல்பதுக்கைகள், கேரளம்,தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் காணப்படுகின்றன. ஈமச்சின்னங்கள் குறித்த கட்டமைப்பு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட்
நமது தமிழர்
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015
சித்தர்களின் அண்டவியல்
சித்தர்களின் அண்டவியல்
இந்த உபதேசத்தில் அவர் பூமியின் வயது, சூர்ய குடும்ப தோற்ற மறைவு, அண்டத்தின் வயது ஆயுள், அண்டவியல் அலகுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறார். மேலும் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போதும் தன் உடலில் இருந்து ஒரு முடி உதிர்வதாகவும், தற்போது அவர் 71 பிரம்மாக்களை பார்த்துள்ளதால் 71 முடிகள் உதிர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என கணிக்கிறது.
சூர்ய குடும்ப ஆயுள் தொகு
பிரம்மாவின் ஒரு நாளே சூர்ய குடும்ப ஆயுள் என்கிறார். அதாவது சூர்ய குடும்ப ஆயுள் 864 கோடி ஆண்டுகள் என்கிறார். பிரம்மாவின் ஒரு நாள் முடியும் போது 14 லோகங்களில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டுமே அழியும் என்றும், மற்ற 11 லோகங்கள் ஒவ்வொரு பிரம்மா இறக்கும் போது அழியும் என்கிறார்.
அதைப்போல் அண்டத்தின் ஆயுள் 311 லட்சத்தி 4 ஆயிரம் கோடி ஆண்டுகள் (பிரம்மாவின் ஆயுள்) என்கிறார்.
விஞ்ஞானம்
இன்றைய விஞ்ஞானம் இதை போன்ற பல்லண்டங்களை மல்டிவெர்சு (multiverse) என கூறுகிறது.
திங்கள், 20 ஜூலை, 2015
ஞாயிறு, 21 ஜூன், 2015
சனி, 13 ஜூன், 2015
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்க 5வது மாநில செயற்குழு கூட்டம்
வெள்ளி, 15 மே, 2015
ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்
வடமொழிப் பெயர் -தமிழ்ப் பெயர்
பிரபவ -நற்றோன்றல்
விபவ -உயர்தோன்றல்
சுக்கில-வெள்ளொளி
பிரமோதூத-பேருவகை
பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்
ஆங்கீரச-அயல்முனி
சிறிமுக-திருமுகம்
பவ- தோற்றம்
யுவ-இளமை
தாது-மாழை
ஈசுவர-ஈச்சுரம்
வெகுதானிய-கூலவளம்
பிரமாதி-முன்மை
விக்ரம-நேர்நிரல்
விச-விளைபயன்
சித்திரபானு-ஓவியக்கதிர்
சுபானு-நற்கதிர்
தாரண-தாங்கெழில்
பார்த்திப-நிலவரையன்
விய-விரிமாண்பு
சர்வசித்த-முற்றறிவு
சர்வதாரி-முழுநிறைவு
விரோதி- தீர்பகை
விகிர்தி-வளமாற்றம்
கர-செய்நேர்த்தி
நந்தன-நற்குழவி
விசய-உயர்வாகை
சய-வாகை
மன்மத-காதன்மை
துன்முகி-வெம்முகம்
ஏவிளம்பி-பொற்றடை
விளம்பி-அட்டி
விகாரி-எழில்மாறல்
சார்வரி-வீறியெழல்
பிலவ-கீழறை
சுபகிருது-நற்செய்கை
சோபகிருது-மங்கலம்
குரோதி-பகைக்கேடு
விசுவாவசு-உலகநிறைவு
பராபவ-அருட்டோற்றம்
பிலவங்க-நச்சுப்புழை
கீலக-பிணைவிரகு
சவுமிய-அழகு
சாதாரண-பொதுநிலை
விரோதி கிருது-இகல்வீறு
பரிதாபி-கழிவிரக்கம்
பிரமாதீச-நற்றலைமை
ஆனந்த-பெருமகிழ்ச்சி
இராட்சச-பெருமறம்
நள- தாமரை
பீங்கள-பொன்மை
காளயுக்தி-கருமைவீச்சு
சித்தார்த்தி-முன்னியமுடிதல்
ரவுத்ரி-அழலி
துன்மதி-கொடுமதி
துந்துபி-பேரிகை
உருத்ரோத்காரி-ஒடுங்கி
இரக்தாட்சி-செம்மை
குரோதன்-எதிரேற்றம்
அட்சய-வளங்கலன்
நன்றி
http://tamilthanthasiddarkal.blogspot.in/2013/10/blog-post_9441.html?m=1#comment-form